ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும்வரை உம்மைத் தொழுதிடுவேன்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன்
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே
3. முடிவில்லா ராஜ்யம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன்