Alangara Vasallale Piravesika

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே நிரம்பிட வந்து நிற்கிறோம் (2)

ஆராதிக்க வந்தோம்
அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே (2)

1. ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே (2)
என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே (2)

2. பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

3. நன்மை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே

4. துதிகனம் மகிமையுமே முழுமனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசீர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே