Anuthinamum Ummil

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்ரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

என் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும்
ஒன்றுமில்லை குப்பை என்று எண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே

அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே