En Sirumaiyai Kannoki

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்