Ennai Thappuvithu Ennai Thaangidum

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும்(தாலாட்டும்) தெய்வமே
- என்னைத் தப்புவித்து
ஆராரிரோ... (8)

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர்
மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்
- என்னைத் தப்புவித்து

நெருக்கப்பட்டும் நான் ஒடுக்கப்பட்டும்
மனமுறிவடைவதில்லை
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
மடிந்து போவதில்லை
- என்னைத் தப்புவித்து

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும்
நீர் என்னை மறந்ததில்லை
உலகம் தான் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை
- என்னைத் தப்புவித்து