Enthan Kanmalai Aanavarae

எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே – 2
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே – 4

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர் – 2
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா – 2
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்