கண்ணோக்கி பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச்சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா (2)
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யெகோவா (2)
1. கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்துக் கொண்டீர்
- தாயே என் இயேசு நாதா
2. இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்த்தவரே
- தாயே என் இயேசு நாதா
3. கண்மணிப்போல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே
- தாயே என் இயேசு நாதா
- கண்ணோக்கி பார்த்த தேவா