நள்ளிரவில் வந்துதித்த விண்ணிண் ஜோதியே
புள்ளனையில் மலர்ந்திட்ட தேவ மைந்தனே
விண்ணவரும் மன்னவரும் மகிழ்ந்தனரே
என்னை மீட்க்க பிறந்த வாச மலரே
- நள்ளிரவில் வந்துதித்த
மாந்தர் பாவங்களை சுமந்து தீர்க்க வந்த
நல்ல மீட்பர் இவரே
இருளை மீட்க்க வந்த தேவமைந்தன் இவரே
விண்ணின் ஜீவ ஒளியே
ஆலொசனை கர்த்தர் இவர் நாமமே
என்னை காக்கும் வல்லமையின் தேவனே
அன்பு மலரே என் வாச மலரே
அன்னை மடியில் தேவ பலனே
- நள்ளிரவில் வந்துதித்த
தியாக உள்ளம் கொண்ட அன்பின் தேவ மகன்
தன்னை உலகில் அமைதி தந்து
மனுவில் பிரியம் கொண்ட
நல்ல மேய்ப்பர் இவரே
தாழ்மையிலும் பண்புமிகு பாலனே
மீட்பராக பாரில் வந்த தேவனே
எந்தன் நேசரே தூயாதி தூயரே
முன்னனையிலே அன்பு பாலனே
- நள்ளிரவில் வந்துதித்த