Nathchram Vanilley Kandhaen

நட்சத்ரம் வானிலே கண்டேன் கண்டேன்
அது விசித்ர கதை சொல்ல கேட்டேன் கேட்டேன்
இரட்சகர் இயேசுவின் பாதம் பனிந்து
பொன் வெள்ளை போலமும் கண்டேன் கண்டேன்

மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன்
நான் விந்தையாய் தூதர்கள் தோன்ற கண்டேன்
சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை
பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன்

சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன்
நான் ஆலயத்தில் அவரை காண பெற்றேன்
தேவ குமாரனை கைகளில் ஏந்தி
மாசமாதானமும் பெற்றேன் பெற்றேன்