Neer Ennodu Irukum Pothu

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே - நான்
தோற்றுப் போவதில்லையே - 2

1. மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் - அல்லேலூயா (8)

2. சிறைச் சாலைக் கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் - அல்லேலூயா (8)

3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே - 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனுக்கு ஆதாயமே - அல்லேலூயா (8)