Neer Nalavar Enbathil

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை

கல்லறை திறந்தது உண்மை தான்
உயிரோடு எழுந்தது உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்
உண்மை தானே உண்மை தானே

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
உண்மை தானே உண்மை தானே

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே