Neer Seitha Nanmaikal

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்துடன் நன்றி சொல்கின்றேன் (2)

என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே (2)

நன்றி நன்றி பலி செலுத்தியே
நான் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் (2)

1. பாவியான நான் வாழ்ந்து பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே (2)
- நன்றி நன்றி

2. நான் திக்கற்று துணையின்றி துடித்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னைத் தேடி வந்தீரே (2)
- நன்றி நன்றி

3. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத இயேசு நீரைய்யா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடாத உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா (2)
நீர் செய்த நன்மைகளை நான் நினைத்து பார்க்கின்றேன்
கருத்தடன் நன்றி சொல்கின்றேன் (2)
- என் தாயின்
- நன்றி நன்றி