Oru Vaarthai Sollum Kaarthavae

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் (2)

மாராவின் தண்ணீர் எல்லாம்
மதுரமாக மாறிப்போகும் (2)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் (2)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே(2)

மலை போன்ற சோதனைகள்
பனி போல மாறிப் போகும் (2)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் (2)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே (2)

சிவப்பான பாவங்களும்
பஞ்சை போல் வெண்மையாகும் (2)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் (2)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே (2)

இருளான வாழ்க்கை எல்லாம்
செழிப்பாக மாறிப்போகும் (2)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் (2)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே (2)